world

img

வெப்ப அலை: 600 க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் உயிரிழப்பு! இந்தியர்கள் 68 பேர்

மெக்காவில் கடும் வெப்ப அலையின் தாக்கத்தால், ஹஜ் பயணம் மேற்கொண்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், அதில் இந்தியர்கள் 68 பேர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம்.அதன்படி இந்தாண்டுக்கான ஹஜ் யாத்திரை ஜூன் 14-இல் தொடங்கியது.

பக்ரீத் திருநாளை கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவிலுள்ள மெக்காவில் 18 லட்சம் பேர் வரை திரண்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தாண்டு சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது. வெப்ப அலையில் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மெக்காவில் நாள்தோறும் 50 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பம் பதிவாகி வருகின்றது.

இதனால், வெப்ப அலையின் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், அதில் இந்தியர்கள் 68 பேர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வரை உயிரிழப்புகள் குறித்து சவுதி அரேபியா அரசுத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.